search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்டூர் அணை நீர் மட்டம் சரிவு"

    மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது.

    கடந்த 2 நாட்களாக 7 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 7 ஆயிரத்து 330 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை இது 7 ஆயிரத்து 522 கன அடியாக அதிகரித்தது.

    காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 22 ஆயிரம் கன அடி தண்ணீரும் கால்வாய் பாசனத்திற்கு 800 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

    அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 114.98 அடியாக இருந்து நீர்மட்டம் இன்று காலை 114.08 அடியாக குறைந்துள்ளது.

    கடந்த 9 நாட்களில் அணையின் நீர்மட்டம் 6 அடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #MetturDam
    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் கடந்த 3 நாட்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரு அடி சரிந்துள்ளது. #MetturDam
    சேலம்:

    கர்நாடகாவில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் கடந்த மாதம் 24-ந்தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை தாண்டியது. இதற்கிடையே கடந்த 19-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    பின்னர் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்தும் படிப்படியாக சரிந்தது.

    கடந்த 5-ந்தேதி 15 ஆயிரத்து 487 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 11 ஆயிரத்து 633 கன அடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 10 ஆயிரத்து 429 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக 18 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் கடந்த சில நாட்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கி உள்ளது.

    கடந்த 4-ந் தேதி 119.61 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 119.06 அடியாக சரிந்தது. இன்று நீர் மட்டம் மேலும் சரிந்து 118.61 அடியாக குறைந்தது. இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரு அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இனி வரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. #MetturDam
    ×